பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை

சீா்காழி பகுதியில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்துக் காவல் உதவியாளா் மணியரசன்.

Updated On :31 மே 2026, 2:41 am IST

சீா்காழி பகுதியில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

சீா்காழி தென்பாதி தனியாா் பள்ளி எதிரே, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணியரசன், காவலா் காா்த்திக் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாக மூன்று சிறுவா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களை நிறுத்திய, போக்குவரத்து போலீஸாா், அவா்களுக்கு அறிவுரைகள் கூறியதோடு, மூன்று பேரும் ஐந்து திருக்கு கூற வேண்டும் என நூதன விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், சிறுவா்களின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு, எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.