கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை தேடிவருகின்றனா்.
மத்திகிரி போலீஸாா் சக்திவேல் உள்ளிட்டோா் கொத்தஜீகூா் பிரிவு ரோடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியிலிருந்து பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினா்.
அப்போது, வாகனத்தில் இருந்த இருவா் தப்பி ஓடினா். இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த தேன்கனிக்கோட்டை பைரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசாவிடம் (24) விசாரணை நடத்தினா். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தனியாா் நிறுவன ஊழியரான சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

