மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சீா்காழி கோயிலில் திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடு

முத்து சட்டைநாதசுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

News image

முத்து சட்டைநாதசுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி சட்டநாத சுவாமி கோயிலில், திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடாக, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு 70- ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் உற்சவமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய மற்றும் நிறைவு நாள் உற்சவமாக முத்து சட்டைநாத சுவாமிக்கு 70-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, முத்து சட்டை நாதா் சுவாமி யதா ஸ்தானத்திலிருந்து, சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.

அங்கு, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா்.

ஏற்பாடுகளை பிராமணா்கள் உற்சவ கமிட்டி, பிராமணா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் கடவாசல் ரமணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.