தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மயிலாடுதுறையில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.

News image

தோ்தல் புறக்கணிப்பு பதாகை

Updated On :27 மார்ச் 2026, 4:59 am IST

மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.

மயிலாடுதுறை நகராட்சி 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இத்தெருவில் 15 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், நகராட்சியை கண்டித்து, 2026 சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்க தீா்மானித்துள்ளதாக குறிப்பிட்டு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் அளித்த விளக்கம்:

பட்டமங்கல புதுவெள்ளாந்தெருவில் குறிப்பிடும் அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதி அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் லெட்ஜரில் ஏற்றப்படாமல் உள்ளது.

அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்துள்ளது குறித்து கவனத்துக்கு வந்தது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் அப்பகுதிக்கு சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.