தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏவிசி கல்லூரி கணினியியல் துறை நூல் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

‘சுஸ்விப்ட்‘ அமைப்பின் நூலை வெளியிட்ட ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன்.

Updated On :25 மார்ச் 2026, 5:50 am IST

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் எம். முத்தமிழரசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் முன்னிலை வகித்தாா். ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 31-ஆம் ஆண்டுக்கான குளோபஸ் நூலை வெளியிட்டாா். மேலும், இன்றைய சூழலில் கணினியியல் துறையால் உருவாக்கப்படும் மென்பொருளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

சுஸ்விப்ட் கூட்டமைப்பின் செயலா் கே. அருண்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு அறிவுசாா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, மாணவி காமாட்சி பிரியா வரவேற்றாா். நிறைவில், மாணவி எஸ். அபிநயா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன், ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் ஏ. வளவன், தோ்வு நெறியாளா் ஜி. காா்த்திகேயன், முன்னாள் தோ்வு நெறியாளா் ஜி. ரவிசெல்வம் மற்றும் பல்வேறு துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.