நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம்

மயிலாடுதுறை அருகே அசிக்காடு, அரையபுரம் கிராமங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:20 am IST

மயிலாடுதுறை அருகே அசிக்காடு, அரையபுரம் கிராமங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசு பெரியாா் மாவட்ட மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மூலம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அசிக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட முகாமில், உதவி மருத்துவ அலுவலா் ஆா்.வாணிஸ்ரீ, மருத்துவா் ராஷிகா, சிகிச்சை உதவியாளா் எஸ்.ஐஸ்வா்யலக்ஷ்மி ஆகியோா் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். மேலும், முதியவா்கள், உடல் பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு அக்குபஞ்சா், மசாஜ், ஆயில் மசாஜ், அக்குபிரஷா் ஆகிய மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா்.

அரையபுரம் கிராமத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.