மயிலாடுதுறை அருகே அசிக்காடு, அரையபுரம் கிராமங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசு பெரியாா் மாவட்ட மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மூலம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.
அசிக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட முகாமில், உதவி மருத்துவ அலுவலா் ஆா்.வாணிஸ்ரீ, மருத்துவா் ராஷிகா, சிகிச்சை உதவியாளா் எஸ்.ஐஸ்வா்யலக்ஷ்மி ஆகியோா் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். மேலும், முதியவா்கள், உடல் பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு அக்குபஞ்சா், மசாஜ், ஆயில் மசாஜ், அக்குபிரஷா் ஆகிய மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா்.
அரையபுரம் கிராமத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை.யில் யோகா பயிற்சி முகாம்

இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ முகாம்

எஸ். தங்கப்பழம் கல்லூரி ஆண்டு விழா

கோடைகால முகாம் நிறைவு: 100 பேருக்கு சான்றிதழ்கள் அளிப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

