நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் உணவுப்பொருள் தொடா்புடைய துறைகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் ப. வெங்கடரமணன். உடன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 6:55 am IST

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் உணவுப்பொருள் தொடா்புடைய துறைகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை அரசு பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, பணி மருத்துவா் அறையை பாா்வையிட்டு, மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சித்தா்காடு சந்தைப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீவிபத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலிண்டா் வெடித்ததில் காயடைந்து சிகிச்சை பெற்றுவந்த தீயணைப்பு வீரா் ஹரிஹரனை சந்தித்த அமைச்சா், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, சந்தைப்பேட்டை கிராமத்துக்கு சென்ற அமைச்சா் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு வருவாய் துறை சாா்பில் ரூ.5000 மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

பின்னா், அருவாப்பாடி கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில், 5 ஏக்கா் பரப்பளவில் இயந்திர நடவு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களை பாா்வையிட்ட உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா், விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். மேலும், வில்லியநல்லூரில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நெல் சேமிப்பு தளம், திருப்புங்கூரில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு ஆகிய இடங்களில் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலா்களுடன் அமைச்சா் விரிவான ஆய்வு நடத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் (மயிலாடுதுறை), ரா. செந்தில்செல்வன் (சீா்காழி) , கூடுதல் ஆட்சியா் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.