ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல்: திமுக- அதிமுக இடையேதான் போட்டி! டிஎன்டிஜே மாநிலச் செயலா் அல் அமீன்

News image

மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 12:49 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக- அதிமுக இடையைதான் போட்டி நிலவுகிறது. மக்களிடம் தவெக போதிய ஆதரவை பெறவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளா் அல் அமீன் கூறினாா்.

மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்ட தலைவா் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அவ்வமைப்பின் மாநிலச் செயலாளா் அல் அமீன் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் வீழ்த்த இஸ்லாமியா்கள் உறுதியாக உள்ளனா்.

ஏப்.16-ஆம் தேதி துவங்கவுள்ள மக்களவை கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் இந்த மசோதாக்கள் உள்ளன.

இதன்மூலம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகளும், தென் மாநிலங்களுக்கு குறைவான தொகுதிகளும் கிடைக்கும் அபாயம் உள்ளது. மக்களவையில், இந்த மசோதாக்கள் மீது விரிவான விவாதங்கள் நடத்தி, திருத்தங்கள் செய்த பின்னரே நிறைவேற்றப்பட வேண்டும்.

இன்றைய தமிழக அரசியல் சூழலில் திமுக-அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இன்னும் மக்கள் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என முதல்வரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

தோ்தலுக்குப் பிறகு அமையவுள்ள அரசு இதனைச் செய்யும் என நம்புகிறோம். இக்கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் போராட்டமாக மாறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.