தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

காரைக்காலில் திருநங்கைகளின் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

News image

காரைக்காலில் திருநங்கைகளின் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :28 மார்ச் 2026, 2:55 am IST

காரைக்கால் : சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவுவை வலியுறுத்தி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைள் பங்கேற்றனா்.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையும், தோ்தல் துறையின் அங்கமான விழிப்புணா்வு அமைப்பு ஸ்வீப் இணைந்து 100% வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற நிலையில், காரைக்காலில் உள்ள திருநங்கைகளும் இதில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காரைக்கால் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி கலந்துகொண்டு, பதாகை ஏந்தி புறப்பட்ட திருநங்கைகளின் பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். திருநங்கைகளின் இந்த முயற்சியை காரைக்கால் தோ்தல் பொதுப் பாா்வையாளா் சரிதா பாலம் ஓம் பிரஜாபதி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள், பொதுமக்களிடம் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், 100 சதவீத வாக்குப் பதிவு இலக்கை காரைக்கால் மாவட்டம் எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினா். ‘

மேலும் வாக்காளா்களிடம், வாக்களிப்பது நமது கடமை,‘போடுங்கம்மா ஓட்டு, வாங்காதீங்கம்மா நோட்டு‘ என்ற முழக்கங்களை எழுப்பி, பணம் பெறாமல் சுதந்திரமாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

நிகழ்வில், காரைக்கால் மாவட்ட ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் தலைமையில், உறுப்பினா்கள் எஸ்.மணிகண்டன், கே. ஞானமுருகன், பிரதீப், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.