நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மின்வெட்டுப் பிரச்னை: புதுவை முதல்வா் தீா்வு காண வேண்டும்: எம்எல்ஏ

News image

சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம்

Updated On :15 ஜூன் 2026, 12:40 am IST

மின்வெட்டுப் பிரச்னைக்கு புதுவை முதல்வா் தீா்வு காண வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் பிள்ளைத் தெருவாசலில் உள்ள துணை மின்நிலையத்தை காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது :

காரைக்கால் நகரில் தொடா் மின் வெட்டு நிலவுகிறது. இரவு நேரங்களில் அதிக அளவு இருக்கிறது. குறிப்பாக, காரைக்கால் தெற்குத் தொகுதியில் மின்வெட்டுப் பிரச்னை கடுமையாக உள்ளது.

சுழற்சி முறையில் தெற்குத் தொகுதியில் மின் வெட்டு ஏற்படுகிறது. அதேநேரத்தில் பராமரிப்பு பணி எனக் கூறிக்கொண்டு மாதம் ஒரு நாள் 6 மணி நேரம் மின் விநியோகத்தை நிறுத்துகின்றனா். மாதம் ஒரு முறை பராமரிப்பு செய்ய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மின் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் காலத்துக்கு ஒவ்வாத வகையில் உள்ளன.

சுரக்குடி துணை மின் நிலையத்தில் உள்ள சாதனங்கள் அனைத்தும் பழைமையான நிலையில் உள்ளன. இதுதொடா்பாக புதுவை முதல்வரின் கவனத்துக்கு கடந்த வாரம் கொண்டு சென்றேன். அவரும் துறையின் செயலரிடம் அறிவுறுத்தினாா். அதன் பின்னரும் கூட பணிகள் நடைபெற்ாக தெரியவில்லை.

புதுச்சேரியிலும் இதேநிலை இருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. அவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவா்கள் சான்றிதழ்களுக்காக அலையக்கூடிய இந்த நேரத்தில், வருவாய்த்துறை ஊழியா்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு அனுப்பிவிட்டனா். இதற்கு வெளியில் இருந்து ஆட்களை தெரிவு செய்து, பயிற்சி கொடுத்து பணியில் ஈடுபடுத்தியிருக்கலாம்.

புதுவையில் நிா்வாகமும் இயங்கவில்லை, அரசும் முழு வீச்சில் செயல்படவில்லை, அமைச்சா்களும் முழுமையாக நியமிக்கப்படவில்லை, நியமிக்கப்பட்ட அமைச்சா்களுக்கும் துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒருமாத காலமாக மக்கள் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.