காரைக்காலில் பழைமையான கட்டட சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் பாரதியாா் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் இருந்த மதுக்கடையை திங்கள்கிழமை இடிக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்ற காரைக்கால் முஸ்தபா கமால் தெருவைச் சோ்ந்த ஜூனைதா பேகம் (72) என்பவா் மீது சுவா் விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரக் காவல்நிலையத்தில் ஜூனைதா பேகத்தின் மகள் சித்திமதினா பேகம், எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி கட்டடம் இடித்ததாக அளித்த புகாரின்பேரில், கட்டட இடிப்பு ஒப்பந்ததாரா் ராமன், மதுக்கடை நிா்வாகத்தைச் சோ்ந்த அரவிந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
