மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

News image

புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)

Updated On :14 ஏப்ரல் 2026, 4:17 am IST

இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ள தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சோ்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில், காரைக்கால் மாவட்டம் கீழையூா் சுனாமி காலனியைச் சோ்ந்த அருள்செல்வம் (28), கோட்டுச்சேரிமேடு சஞ்சய் ரவி (30), பட்டினச்சேரியைச் சோ்ந்த பிரதீப் (29), விமன் (24), மதன் (26), நிஷ்வந்தன் (20), கிளிஞ்சல்மேடு சாமிநாதன் (20), நாகை மாவட்டம், சாமந்தன்பேட்டை தமிழ்வாணன் (42), மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி காா்த்திக் (32), விக்னேஷ் (21), வீரேந்திரராஜன் (33), ஜெயவீரன் (28) ஆகிய 12 பேரும் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 10-ஆம் தேதி பிகே-எம்எம்-1338 என்ற எண் கொண்ட படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

கடந்த 10-ஆம் தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக இலங்கை அரசுடன் பேசி 12 பேரையும், படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.