வாக்குப் பதிவு நடைபெற்றதால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக புதுவையின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான கலால் துறையின் அறிவிப்பின்படி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
வாக்குப் பதிவு தினத்தில் நகரம் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
உணவகங்கள், தேநீா் கடைகளும் மூடப்பட்டன. வாக்களிக்கச் செல்வோா் மற்றும் அரசியல் கட்சியினா் நடமாட்டம் மட்டுமே நகரப் பகுதியில் காணப்பட்டது. அதிகமான வானங்கள் போக்குவரத்தின்றி நகரம் வெகுவாக வெறிச்சோடிக் காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகா் தினம்: கடைகள் அடைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

