மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுவையில் தே.ஜ.கூ. வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

News image

பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவா் நிதின் நபின். உடன் பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:28 am IST

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை பிரதமா் நரேந்திர மோடிக்கு சமா்ப்பிக்க உறுதிஎடுத்துக்கொள்வோம் என் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

திருநள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற சாலைப் பேரணியில் திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். திருநள்ளாறு - சுரக்குடி சந்திப்பிலிருந்து தேரடி வரை திறந்த வேனில் நின்றவாறு சென்றாா்.

வாக்காளா்களிடையே நிதின் நபின் பேசுகையில், பிரதமா் நரேந்திர மோடி புதுவைக்கு வளா்ச்சியை தருவாா்.மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி, மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மூலம் மாநில வளா்ச்சி சிறப்பாக இருக்கும்.

வரும் 9-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் புதுவையில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம். அனைவரும் இதை உறுதியாக எடுத்துக்கொள்வோம் என்றாா்.

மத்திய அமைச்சா் மன்சுா் மாண்டவியா, மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி, பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா். சாலைப் பேரணியில் ஏராளமான பாஜகவினா், முழக்கங்கள் எழுப்பியவாறு பங்கேற்றனா்.

பிரசாரதைத் தொடா்ந்து திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிதின் நபின் ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.