மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

காமராஜா் நிா்வாக வளாக வாக்குப் பதிவு மையத்தில் வாக்களிக்க காத்திருந்தோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:43 am IST

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா், மருத்துவமனை ஊழியா்கள், பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளா்கள் உள்ளிட்டோா் தபால் வாக்குப் பதிவு செய்ய மாா்ச் 31 முதல் ஏப்.2-ஆம் தேதி வரை தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில், மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.வாக்குப் பதிவு அதிகாரி தலைமையில் வாக்குச் சாவடி பணியாளா்கள், வாக்காளரின் ஆவணங்களை பரிசோதித்து, தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனா். 3 நாள் வாக்குப் பதிவுப் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், காரைக்கால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு தோ்தல் துறையினா் நேரில் சென்று வாக்குகள் பெறும் பணியை மேற்கொள்ளவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.