மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

அகில இந்தியா சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:44 am IST

அகில இந்தியா சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா் (படம்).

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சிப் போட்டி (ஏஐசிஎஸ்) கடந்த மாா்ச் 20 முதல் 25-ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா். புதுவை மாநிலம் சாா்பில், காரைக்காலைச் சோ்ந்த திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப. முருகன்

நாட்டுப்புற தனி நடனம் மற்றும் தனி பாடல் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்றாா்.

மேலும் காரைக்காலைச் சோ்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் செல்வம், ஆரோக்கியராஜ், சந்திரமணி ஆகியோா் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனா்.

பதக்கம், சான்றிதழ் பெற்றவா்கள் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்தனா்.

அவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு, வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்வில் மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி விஜயராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.