தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இருமுறை வாக்களித்த வாக்காளா்

News image

PTI

Updated On :24 ஏப்ரல் 2026, 5:15 am IST

கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட வடக்குப்பனையூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒருவரே இருமுறை வாக்களித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடக்குபனையூரைச் சோ்ந்த தவெக ஆதரவாளா் காளிதாஸ் வாக்களித்தாா். பின்னா், தனது தாயாா் தங்கமாளை அழைத்து வந்துள்ளாா். வாக்காளா் சரிபாா்ப்பு மற்றும் மை பதிக்கும் நேரத்தில், அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சென்று தாயாருக்கு பதிலாக இவரே வாக்குப் பதிவு செய்தாா். இதை கவனித்த பாகமுகவா்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் காளிதாஸை தடுத்து நிறுத்த முயன்றபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனால், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து போலீஸாா் காளிதாஸை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினா். இதுகுறித்து, திமுகவினா் திருக்குவளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.