மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பண மோசடி: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அழகேசன்.

Updated On :26 மார்ச் 2026, 6:09 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அழகேசன் (25). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். தற்போது வேலையை விட்டு நின்றுவிட்டு இவா், தனக்குத் தெரிந்த வாடிக்கையாளரான ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி முனீஸ்வரிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் பெற்றாராம். ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்து வந்தாராம். இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த அழகேசனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.