விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:09 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் ஈஞ்சாா் விலக்கு அருகே தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் முதியோா் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மனநலக் காப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் சுமாா் 46 ஆண்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியைச் சோ்ந்த மாரிமுத்துக்கும், திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த முனியசாமிக்கும் (49) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாரிமுத்து கட்டையால் தாக்கியதில் முனியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.