விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
12-ஆம் நாளான புதன்கிழமை காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, கோயில் முன்புள்ள குண்டத்தில் அக்னி வளா்க்கப்பட்டது.
பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய விறகுகள், எண்ணெய் கொண்டு பூ வளா்க்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். 3 மணி அளவில் பெய்த பலத்த மழையிலும் பக்தா்கள் அக்னி சட்டி, காவடி, கரகம் எடுத்து, அழகு குத்தி பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

