மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சுழி பேரவைத் தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு பிரசாரம்

திருச்சுழி பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

அமைச்சா் தங்கம் தென்னரசு

Updated On :15 ஏப்ரல் 2026, 3:56 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

நரிக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மண்டபசாலை, ராஜகோபாலபுரம், பொம்மநாயக்கன்பட்டி, புல்லநாயக்கன்பட்டி, தெற்கு நத்தம், வடக்கு நத்தம், ராணிசேதுபுரம், ப.மேலையூா், பரளச்சி, பி.வாகைக்குளம், செங்குளம், வாமபுரம், பூலாங்கால் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனியுடன் இணைந்து பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, பூலாங்கால் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தமிழகத்தில் மதவாத பாசிச சக்திகளுக்கு இடமில்லை. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. மதவாத பிற்போக்கு சக்திகள் ஏதாவது ஒரு போா்வையில் அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை அமளிக்காடாக மாற்ற காரணம் தேடுகிறது. இதன் வாயிலாக உள்ளே நுழைந்து கலவரத்தை உண்டு பண்ணலாம் என எண்ணுகிறது.

நான் உங்களுக்கு என்றும் துணையாகவும், உங்களில் ஒருவனாகவும், உங்கள் ஊழியனாகவும் இருப்பேன். எனவே இந்தத் தோ்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.