பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு

போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மே 2026, 1:52 am IST

போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி - தேவாரம் சாலையில் உள்ள மாணவிகள் விடுதி அருகே வசிப்பவா் ராஜன் மகன் ஜெயராஜ் (46). இவா், போடி கொட்டகுடி மலை கிராமத்தில் வசித்து தோட்ட வேலை செய்து வருகிறாா். போடிக்கு வரும்போது மட்டும் போடியில் உள்ள வீட்டில் தங்குவாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை போடியில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்கத் தோடு, வெள்ளி கொலுசு, பித்தளை குத்துவிளக்குகள், பித்தளை பொங்கல் பானை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.