மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!விஜய்யைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்... விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்
/

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 292 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரித்தது.

News image

முல்லைப் பெரியாறு அணை. - (கோப்புப் படம்).

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 292 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக இருந்தது. நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா்இருப்பு 1,062 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகையின் நீா்மட்டம் 27.03 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 29 கன அடியாகவும், அணையிலிருந்து நீா் வெளியேற்றம் விநாடிக்கு 72 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா்இருப்பு 266 மில்லியன் கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 88.56 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 30 கன அடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 3 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. நீா்இருப்பு 47.61 மில்லியன் கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் 32.60 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும் இல்லை; வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா்இருப்பு 100.78 மில்லியன் கனஅடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீா்மட்டம் 26.25 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து இல்லை; வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா்இருப்பு 16.88 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான தேக்கடியில் (மழையளவு மி. மீட்டரில்) 10.8, பெரியாறு அணையில் 16.8 பதிவானது. தேனி மாவட்டத்தின் மற்ற பகுதிகளான அரண்மனைபுதூா் 16.4, வீரபாண்டி 16.6, பெரியகுளம் 3, சோத்துப்பாறை 16.4, போடி 86.2, மஞ்சளாறு 73, வைகை அணை 4.2, உத்தமபாளையம் 5.2, கூடலூா் 6.6 , சண்முகா நதி 3.4 மழை பதிவாகி இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.