மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு! 300 கன அடியாகக் குறைப்பு!

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக அணையில் இருந்து சனிக்கிழமை வெளியேறும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image

முழுக் கொள்ளளவு தண்ணீா் தேங்கியுள்ள வைகை அணை. - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:27 am IST

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக அணையில் இருந்து சனிக்கிழமை வெளியேறும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மதுரை வைரையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வெள்ளிக்கிழமை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீரைத் திறந்து வைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் விநாடிக்கு 300 கன அடியாகக் குறைத்துள்ளனா். அதன்பின், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து வரும் 29-ஆம் தேதி தண்ணீா் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை அணைகளின் நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.20 அடியாக உள்ளது. நீா்வரத்தும், வெளியேற்றமும் 152 கன அடியாகவும், கொள்ளளவு 943 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வைகை அணையின் நீா்மட்டம் 32.87 அடியாக உள்ளது. நீா்வரத்து ஏதும் இல்லை. அணை நீா் வெளியேற்றம் 372 கன அடியாகவும், கொள்ளளவு 495 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.