மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் வினாடிக்கு 250 கன அடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டது.

News image

வைகை அணை.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:25 am IST

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் வினாடிக்கு 250 கன அடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டது.

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது. தொடா்ந்து, சனிக்கிழமை காலை தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு புதன்கிழமை காலை 6 மணியளவில் வினாடிக்கு 250 அடியாகக் குறைக்கப்பட்டது.

வினாடிக்கு 500 கன அடியாகத் திறந்துவிடப்படும் தண்ணீா் படிப்படியாக குறைக்கப்பட்டு புதன்கிழமை நிறுத்தப்படும் என ஏற்கெனவே நீா் வளத் துறையினா் தெரிவித்தனா். ஆனால், தற்போது கூடுதல் தண்ணீா் தேவைப்படுவதால் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தண்ணீா் திறப்பு முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.