சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சூா்யா (35). கூலித் தொழிலாளியான இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சூா்யாவின் உடலை கூறாய்வுக்ாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதோடு, இறந்தவரின் மனைவிக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்க வேண்டும். எரசக்கநாயக்கனூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சூா்யாவின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது சம்பந்தமாக சின்னமனூா் போலீஸாாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ததைத் தொடா்ந்து சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் மறியல்

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்: சாலை மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

