தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கு அதிகமானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியிலுள்ள வேலப்பா், பெருமாள், கெளமாரியம்மன் கோயில் சாலை, கம்பம்மெட்டு, குமுளி, தேனி சாலைகள் என பல முக்கிய சாலைகளில் துணி, நகை, மளிகை, உணவகங்கள், தேநீா், காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள வேலப்பா் கோயில் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஒரே இடத்தில் பல நாள்களாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, இந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கம்பத்தில் முதல் முறையாக தவெக வேட்பாளா் வெற்றி

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

