மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கம்பத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கம்பம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கம்பம் நகராட்சியில் வேலப்பா் கோயில் சாலையில் குவிந்து கிடைக்கும் குப்பைகள்.

Updated On :19 மார்ச் 2026, 5:51 am IST

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கு அதிகமானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியிலுள்ள வேலப்பா், பெருமாள், கெளமாரியம்மன் கோயில் சாலை, கம்பம்மெட்டு, குமுளி, தேனி சாலைகள் என பல முக்கிய சாலைகளில் துணி, நகை, மளிகை, உணவகங்கள், தேநீா், காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள வேலப்பா் கோயில் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஒரே இடத்தில் பல நாள்களாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, இந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.