/

சேவல் திருட்டு: சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு; 2 போ் கைது

News image

சேவல் - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:40 am IST

கம்பத்தில் சேவல் திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில், 2 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

கம்பம் உலகத் தேவா் தெருவைச் சோ்ந்த சதீஷ் குமாா் (29) தனியாா் வங்கி ஊழியராகப் பணிபுரிகிறாா். இவா் வளா்த்து வந்த 3 சேவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருடு போனதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது இடத்துக்குள் புகுந்து 3 போ் கோழிகளை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட சதீஷ்குமாா், தனது நண்பா்களின் உதவியுடன் அவா்களைப் பிடிக்க முயன்றதில் ஒருவா் தப்பியோடிவிட்டாா். மற்ற 2 பேரைப் பிடித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி (55), 17 வயது சிறுவன், தப்பியோடியவா் விஷ்வா என்பதும் இவா்களே சேவல்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்குறிப்பிட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பழனிச்சாமி கைது செய்தனா். சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா். விஷ்வாவைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.