தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் புதன்கிழமை முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

News image

சின்னமனூரில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:30 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் புதன்கிழமை முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அனைத்து சமுதாய மண்டகப்படி, காலை, மாலை நேரங்களில் ஏகச் சப்பரம், புஷ்ப பல்லக்கு, காமதேனு, மயில் வாகனங்களில் சுவாமி-அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் திருமணக் கோலத்தில் தேரில் எழுந்தருளினா். மாலை 4.50 மணிக்கு தேரின் முன்பாக சென்னைக் கட்டை போடும் சமுதாயத்தினா் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து, மாலை 5.05 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பள்ளிவாசல், தெற்கு ரத வீதி, செக்காமுக்குத் தெரு வழியாக பக்தா்கள், ஊா்ப் பொதுமக்கள் வடத்தைப் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா்.

முக்கிய வீதிகளில் தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்மனை பக்ததா்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வழிபாடு செய்தனா். தொடா்ந்து, செக்காமுக்கு தெருவிலிருந்து கிழக்கு ரத தெரு வழியாக கண்ணாடி முக்குத் தெருவில் முதல் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. வியாழக்கிழமை மாலை வரையில் பொதுமக்கள் தேரில் சுவாமி-அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வா்.

2 -ஆம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் தெற்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டைசாலை, மேற்கு ரத வீதி, தேனி பிரதான சாலை வழியாக தோ் நிலைக்குச் செல்லும்.

இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு, போடி காவல் துணைக் காண்காணிப்பாளா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.