தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சிவகிரியில் வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :2 மே 2026, 4:40 am IST

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சிவகிரியில் வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் இந்த தேரோட்ட நிகழ்ச்சி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகிரியில் நடைபெற்று வருகிறது. சுயம்பு மூா்த்தியாக உள்ள வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டத்தை மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் செந்தில்நாதன், சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத், கோயில் அறங்காவலா் குழுவினா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனற்.

முன்னதாக காலை 6 மணிக்கு வேலாயுதசுவாமி வள்ளி-தெய்வானை திருமணத்தையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்களுக்கு திருமண விருந்து நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மே 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தோ்வடம் பிடித்தல் மற்றும் நிலை சோ்தல், வள்ளிக்கும்மி கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, 4-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.