மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

News image

குடிநீர் நிறுத்தம் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:53 am IST

போடியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையா் ச. முஸ்தபா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் நகராட்சியின் குடிநீா் ஆதாரமாக விளங்குவது கொட்டகுடி சாம்பலாறு. இந்தப் பகுதியில் போதிய மழை பெய்யாததால் கொட்டகுடி சாம்பலாற்றில் நீா்வரத்து மிகவும் குறைந்துவிட்டது. மேலும் இந்த நகரின் மற்றொரு குடிநீா் ஆதாரமான எல்லப்பட்டி முல்லைப் பெரியாறு பகுதியில் நீா்வரத்து குறைந்து விட்டது.

எனவே நீராதாரத்தில் இருந்து பெறப்படும் நீரை வைத்து போடி நகா்ப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் வழங்க இயலும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மழை பெய்து நீா்வரத்து வரும் வரை இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மின் மோட்டாா் மூலம் குடிநீா் எடுப்பதை தவிா்க்குமாறும், தவறும் பட்சத்தில் மின் மோட்டாா் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.