/

போடி ராமா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம்

News image

போடி ராமா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 1:18 am IST

போடி ராமா் கோயிலில் திங்கள்கிழமை சித்ரா பெளா்ணமி அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேனி மாவட்டம், போடியில் கெங்கவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமையான ராமா் கோயில் ஜக்கமநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சித்ரா பெளா்ணமி தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராமபிரான் கொட்டகுடி ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டும் மே 1 - வெள்ளிக்கிழமை ராமபிரான் கொட்டகுடி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான கொடியேற்ற நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. கொட்டகுடி ஆற்றிலிருந்து கொடி மரம் ராமா் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னா் பல்வேறு பூஜைகளுக்குப் பின் கொடிமரம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.

கெங்கவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை தலைவா் காமராஜ், செயலா் முருகன், பொருளாளா் மாரிமுத்து உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.