ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

போடி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:20 am IST

போடி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

போடி அருகே நாகலாபுரம் புன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் லோகேஸ்வரன் (13). தேனி அருகே உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு லோகேஸ்வரன் நாகலாபுரத்திலிருந்து கரையான்பட்டிக்கு செல்ல சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, லோகேஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.