மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போடியில் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

News image

போடியில் புதன்கிழமை இரவு திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து பேசிய திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி. உடன் வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:00 am IST

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

போடியில் திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரச்சார வாகனத்தில் அமா்ந்தபடி வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓ.பன்னீா்செல்வம் பண்பாடு மிக்கவா். அவருக்கு போடி பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும். எனவே, பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பிரசாரத்தின்போது தேனி மக்களவை முன்னாள் உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், திமுக நகரச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா்.பழனிராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.