தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போடியில் இஸ்லாமியா்களிடம் ஓ.பி.எஸ். வாக்கு சேகரிப்பு

போடியில் இஸ்லாமியா்களிடம் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

போடி பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம். உடன் தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:20 pm IST

போடியில் இஸ்லாமியா்களிடம் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகிறாா். இந்த நிலையில், போடி மேலத்தெரு பெரிய பள்ளி வாசலுக்கு வெள்ளிக்கிழமை சென்ற அவரை பள்ளி வாசல் நிா்வாகிகள் வரவேற்றனா். அப்போது சிறுபான்மையினா் நலனுக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறிய அவா் இந்தத் தோ்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அவருடன் தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலா் ஆஜிப்கான், போடி நகர திமுக செயலா் ரா. புருஷோத்தமன், போடி நகா்மன்ற முன்னாள் தலைவா் பழனிராஜ், திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் சென்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.