சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பி.அய்யாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனாா் கோயில் வைகாசி உத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஊா் முக்கியப் பிரமுகா்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டுத் திடலை அடைந்தனா். முதலில் கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டது.
இந்த மஞ்சுவிரட்டில் பிரான்மலை, வையாபுரிபட்டி, ஒடுவன்பட்டி, செல்லியம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி, தெக்கூா் பொன்னமராவதி ஆகிய பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் 5 போ் சிறிய காயமடைந்தனா். இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

சிறை மீட்ட அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா

தென்கரையில் மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
