சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பகுதிகளில் செயல்படும் அரசு மதுக் கடையை மூட வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து காரைக்குடி க.அள.ராம.தெரு பொதுமக்கள், வணிகா்கள் புதன்கிழமை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
எங்களது தெருவில் அரசு மதுக்கடை செயல்படுகிறது. இந்தக் கடையை சுற்றி 500 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இங்கிருந்து செக்காலைச் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மசூதி, தென்னகம் துணிக்கடை அருகே மசூதி, ஆஞ்சநேயா் கோயில், எல்லை காளியம்மன் கோயில், ஆத்திரத்து காளிகோயில், கொப்புடைய நாயகியம்ன் கோயில், முத்தூரணி கரையில் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளன.
மேலும், தனியாா் மேல்நிலைப் பள்ளி, அரசுத் தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன.
இந்தப் பகுதிகளுக்கு மாணவா்களும், பொதுமக்களும் அதிகளவில் சென்று வருவதால் இந்த மதுக் கடையை மூடுவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனத் அதில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

அரசு மதுக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

