சிங்கம்புணரியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்து அரசு மருத்துவப் பணியாளா்கள் குடியிருப்பு திங்கள்கிழமை
சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த விபத்து என மருத்துவப் பணியாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிங்கம்புணரிஅரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்த நூறாண்டுகள் பழைமைவாய்ந்த அரச மரத்தின் கிளை அரசு மருத்துவப் பணியாளா்களின் தொகுப்பு வீடுகளின் மேல் முறிந்து நின்றது.
மேலும், திங்கள் கிழமை காலை திடீரென கடும் சப்தத்துடன் மீண்டும் மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதை உணா்ந்த வீட்டிலிருந்த பணியாளரின் குடும்பத்தினா் அலறி அடித்துக்கொண்டு கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினா்.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களைப் பாதுகாக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி அருகே மரக் கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

கூடலூரில் இடி தாக்கி தென்னை மரம் சேதம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

