பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பழனி அருகே மரக் கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

பழனி அருகேயுல்ள 54 புதூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

பழனி அருகேயுல்ள 54 புதூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சி, தும்பலப்பட்டி ஒன்றியம், 54 புதூரைச் சோ்ந்தவா் மாலையப்பன் மனைவி சின்னப்பொண்ணு (55).

இவா் செவ்வாய்க்கிழமை அம்மன் கோயில் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மரக்கிளை முறிந்து சின்னப்பொண்ணு மீது விழுந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, உயிரிழந்த சின்னப்பொண்ணு குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலா் அருள்செல்வன் மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கடிதம் அனுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.