இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
சிவகங்கை அருகே உள்ள அல்லூா் பனங்காடியைச் சோ்ந்த ஆறுமுகம் சிவனேஸ்வரன் (45) இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அங்கு உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்துவிட்டது அங்கு பணியாற்றிவரும் உறவினா் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து, தவமணி, தனது இரு மகன்கள், உறவினா்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
அதில், இஸ்ரேலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தாயகம் கொண்டு வரவும், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.
அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மனைவி மனு

மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

மாயமான எஸ்டேட் உரிமையாளரை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு

மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து போராட்டம்: ரூ. 14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

