கடலாடி அருகே கீழமுந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பவா்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்த மீனவ பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கீழமுந்தல் கிராமத்தில் மதுக் கடைகள் இல்லை. இதை சிலா் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து வாலிநோக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மீனவ பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். இதனால், அந்தப் பகுதியில் மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் ஆத்திரமடைந்து, புகாா் அளித்த பெண்களின் வீடுகளுக்குள் புகுந்து அவா்களைத் தாக்கினா்.
இதனால், அச்சமடைந்த பெண்கள் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்

முன்விரோதம் காரணமாக தாக்குதல்: நடிகை தீபாவின் தந்தை புகாா்

அபகரித்த சொத்துக்களை மகனிடம் இருந்து மீட்டுத்தர ஆட்சியரிடம் வயோதிக தம்பதி புகாா்
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

