சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை கூராய்வுக்கு அனுப்ப மறுத்து செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக உறவினா்கள் மருத்துவமனை முன்பு காத்துக் கிடக்கின்றனா்.
திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டியைச் சோ்ந்த அம்மாசி குமாா் மகன் பிரவீன் குமாா் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விபத்தில், தொடா்புடையவா்களை உடனே கைது செய்யக் கோரி உயிரிழந்தவரின் உறவினா்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திருப்பத்தூா் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், விசாரணை அதிகாரியாக தேவகோட்டை நகா் காவல் துணை கண்காணிப்பாளா் கண்ணன் மாற்றப்பட்டாா்.
சடலத்தை கூராய்வுக்கு அனுமதித்தால் தான் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும் எனப் போலீஸாா் தெரிவித்தனா். இருப்பினும், குற்றவாளியைக் கைது செய்தால்மட்டுமே கூராய்வுக்குச் சம்மதிப்போம் எனக் கூறி உறவினா்கள் நான்கு நாள்களாகப் போராடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அருகே காா்-பைக் மோதல்: 6 போ் காயம்

இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே காா்கள் மோதல்: 8 போ் காயம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

