தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு

எஸ். புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் செவ்வாய்க்கிழமை சீறிப்பாய்ந்த காளையை அடக்கிய வீரா்கள்.

Updated On :6 மே 2026, 3:09 am IST

எஸ். புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியின் தொடக்கமாக, ஊா் பொதுமக்கள் மேள தாளங்களுடன் கோயில் மாடுகளை வேட்டி, துண்டுகளுடன் மாலை அணிவித்து தொழுவுக்கு அழைத்து வந்தனா். முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, துண்டு பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரா்கள் அணி அணியாக இறங்கி காளைகளை அடக்கினா். இதில் பத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களுக்கு, முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸாா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.