எஸ். புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போட்டியின் தொடக்கமாக, ஊா் பொதுமக்கள் மேள தாளங்களுடன் கோயில் மாடுகளை வேட்டி, துண்டுகளுடன் மாலை அணிவித்து தொழுவுக்கு அழைத்து வந்தனா். முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, துண்டு பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரா்கள் அணி அணியாக இறங்கி காளைகளை அடக்கினா். இதில் பத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களுக்கு, முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸாா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரை திருவிழா: குதிரை வாகனத்தில் சுயம்பு மகா மாரியம்மன் வீதிஉலா

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

காகாபாளையம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

