விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரியில் புதன்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 6:04 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று, மஞ்சுவிரட்டுத் திடலில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்தனா். இதையடுத்து, இளவட்ட மஞ்சுவிரட்டு தொடங்கியது.

இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கூட்டத்துக்குள் சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.