தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

News image

கண்ணமங்கலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:50 am IST

திருப்பத்தூா், ஏப். 5: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கண்ணமங்கலபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-க்கு மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞா்கள் அடக்க முயன்ற போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா். அவா்கள் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனா்.

இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்கள், பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வந்து மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனா். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிங்கம்புணரி போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.