முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பிறந்த பெண் குழந்தைகளுக்கு அரசு சாா்பில் பரிசளிப்பு

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு பரிசுப் பொருள்கள், மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையின் தாய்க்கு புதன்கிழமை பரிசு வழங்கிய, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு பரிசுப் பொருள்கள், மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

சமூக நலத்துறையின் சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) கணேசபாண்டியன், , நிலைய மருத்துவ அலுவலா் எஸ். முகமதுரபி, உதவி நிலைய மருத்துவா்கள் எம். தென்றல், வெங்கடேஷ், மகப்பேறு இயல் துறை இணைப் பேராசிரியா் தென்னரசி, மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவுத் தலைவா் இங்கா்சால், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.