சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்று வந்த மருத்துவப் பயனாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (38) இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மனைவி ராணிமுத்து அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அங்கிருந்த செவிலியா்களிடம் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்கள் கழிவறை கதவை உடைத்து பாா்த்தபோது, பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சிவகங்கை நகா் போலீஸாா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவக் கல்லூரியில் யோகாசனப் பயிற்சி
காப்பா் குழாய் திருடியவா் கைது
காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகள் 145 பேருக்கு நவீன அறுவைச் சிகிச்சை: சிவகங்கை அரசு மருத்துவமனை சாதனை

பிரசவத்தின் போது குழந்தை இறந்த சம்பவம்: அரசு மருத்துவமனை அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
