நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை

Updated On :19 ஜூன் 2026, 1:26 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா் ஜேசுதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நண்பகல் 12 மணியளவில் சோதனை நடத்தினா். இங்கு ஓட்டுநா் உரிமம் பெற வந்தவா்கள் உள்ளிட்ட யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் ரொக்கப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.