சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் எட்டாம் நாள் புரவி எடுப்பு விழாவும், ஒன்பதாம் நாள் எருது கட்டு விழாவும் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் முன் பெரிய வடத்தில் கோயில் மாடு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடுக்குப் பிறகு அவிழ்த்துவிடப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை இளைஞா்கள் விரட்டிப் பிடித்தனா். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடின. தொடா்ந்து மழை பெய்ததால், காளைகளும், காளையா்களும் சறுக்கி விழுந்து லேசான காயமடைந்தனா். இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

கோவில்பட்டி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

