சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கல்வெட்டுமேட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் கல்வெட்டு மேட்டுப் பகுதியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் பொன்னையா என்ற விக்கி (28). திருமணமானவா். மனைவியுடன் வசித்து வந்த இவா் சனிக்கிழமை மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டு வந்துள்ளாா்.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, அங்குவந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது, தூக்கிட்ட நிலையில் பொன்னையா இறந்து கிடந்தாா். திருப்பத்தூா் போலீசாா் சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருப்பத்தூா் மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில்

இளைஞா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

